nalini filed petition for demands parole for her husband murugan | மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு பரோல் வழங்கவேண்டும்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர். அதில், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் பேரறிவாளனை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. மீதமுள்ள 6 பேர் விடுதலை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தற்போது தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

நேஷ்னல் ஹெரால்டு வழக்கு- சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube