சச்சின் டெண்டுல்கர், அர்ஜுன் ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் முடிவு என்று கையை விரித்து விட ஷேன் பாண்ட் இப்போது உண்மையை உடைத்துள்ளார். அதாவது அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் நிறைய கடினமாக உழைத்து, கடும் பயிற்சி செய்து தன் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டும் என்கிறார் ஷேன் பாண்ட்.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்கீடா தளத்துக்கு பேட்டியளித்த ஷேன் பாண்ட், “அவர் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணியில் இருப்பது வேறு, ஆடும் 11 வீரர்களை தேர்வு செய்வது வேறு.
அவர் இன்னும் கிரிக்கெட்டில் மேம்பட வேண்டியுள்ளது. இன்னும் நிறைய நிறைய அவர் உழைக்க வேண்டியுள்ளது. இந்த மட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஒன்று இருந்தாலும் அந்த வீரரும் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அர்ஜுன் இன்னும் தன் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அவர் இதில் மேம்பாடடைந்து தன் இடத்தை தானே வெல்வார் என்று நான் பார்த்தேன்.” என்றார் ஷேன் பாண்ட்.
ஆகவே அர்ஜுன் டெண்டுல்கரை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு கிரிக்கெட் காரணங்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஷேன் பாண்ட் தெளிவுபடுத்திவிட்டார். 2 சீசன்களாகி விட்டது மும்பை இந்தியன்சில் அர்ஜுன் இணைந்து, ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படாததற்கு அவர் போதாமைதான் காரணம் என்பது இப்போது புரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.