மதுரை: விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரபு (35). இவர் 6.5.2016-ல் மோட்டார்சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்றார். அப்போது லாரி மோதி உயிரிழந்தார்.