இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார். கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1200 கோடி வசூலித்துள்ளது.
சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான மசாலா திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார்.
இதையும் படிங்க – வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வோர்க் அவுட் போட்டோஸ் வைரல்..
படத்தில் இடம்பெற்ற ராம்சரணின் காவல் நிலைய அறிமுக காட்சி, ஜூனியர் என்டிஆர் காட்டில் அறிமுகமாகும் காட்சி, பாலம் ஸ்டாண்ட், ராம் சரண் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களின் பாராட்டை அதிகம் பெற்றன.
அசாத்தியமான சக்திகளை ஒன்றாக இணைக்க, எங்கள் இயக்குனர் @ssrajamouli இந்த சாத்தியமற்ற பாலம் வரிசையை நினைத்து, சாத்தியமற்றதை சாத்தியமாக்கியது!! 🔥🌊🙌🏻
VFX முறிவு – #RRR திரைப்படம் https://t.co/Zm1GZJmQx8 @surpreezevfx @srinivas_mohan @DOPSenthilKumar @சாபுசிரில்— RRR திரைப்படம் (@RRRMovie) மே 30, 2022
குறிப்பாக பாலம் ஸ்டாண்ட் காட்சி, டிரெய்லரில் இடம்பெற்ற போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ரசிகர்களை திருப்திபடுத்தியது.
இந்நிலையில் அந்த ஆக்சன் காட்சி விசுவல் கிராபிக்ஸ் உதவியுடன் எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தில் இந்த காட்சிகள் கிராபிக்ஸ் என்று கூற முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. பாகுபலி, பாகுபலி 2 படங்களிலும் விசுவல் கிராபிக்சை ராஜமவுலி சிறப்பாகப் பயன்படுத்தி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.
அடுத்ததாக ராஜமவுலி மகேஷ்பாபு படத்தை இயக்குகிறார். புதையல் எடுப்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆப்பிரிக்க காடுகளில் ஷூட்டிங் நடைபெறும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகேஷ்பாபு இயக்கவுள்ள படத்திற்கும் ராஜமவுலியின் ஆஸ்தான கதாசிரியரான அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.