உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதையடுத்து விஜய் பாபு தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் அவரைப் பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, அவரை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டது. மேலும் 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்தது.
இதனை தொடர்ந்து விஜய்பாபு சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து கொச்சி வந்தார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் நடிகை குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். இது தொடர்பாக விஜய் பாபு, என் மீது புகார் கூறிய நடிகை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம். எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் அவர் என்மீது ஏற்பட்ட புகார் கூறியுள்ளார்.
இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகையுடன் வாட்ஸ் அப்பில் சில தகவல்களையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளார் விஜய் பாபு. இந்த விவகாரம் தற்போது மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.