சீனா வீரரை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் டாப் – News18 Tamil


இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியின் கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவ்வை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்தார்.

39 நகர்வுகளுக்குப் பிறகு வழக்கமான கிளாசிக்கல் போட்டி டிரா செய்யப்பட்ட பின்னர், வெள்ளிக்கிழமை விஸ்வநாதன் ஆனந்த் ஆர்மகெட்டனில் (சடன் டெத் கேம்) வென்றார்.

அர்மகெடானில் உலக சாம்பியனான பிப் ஹாவோவை 44 நகர்வுகளில் முடித்தார். தன் புள்ளிகள் எண்ணிக்கையை 7.5 ஆக உயர்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக 6 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி சோ மற்றும் உலகின் நம்பர்-1 மேக்னஸ் கார்ல்சன் (5.5) உள்ளனர்.

முதல் இரண்டு சுற்றுகளில் பிரெஞ்சு வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது வெற்றி இதுவாகும்.

இரண்டாவது சுற்றில் ஆர்மகெடான் சுற்றில் சோவிடம் தோற்ற பிறகு, தைமூர் ராட்ஜபோவுக்கு எதிராக கார்ல்சன் மீண்டும் வெற்றி பெற்றார்.

கிளாசிக்கல் கேம் டிராவில் முடிந்தால் இந்த நார்வே செஸ்ஸில் ஆர்மகெட்டன் என்ற அவசர, சடன் டெத் கேம் வைத்து வெற்றியாளர்களை முடிவு செய்வது வழக்கம்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube